விடுகதைகள் - பாகம் -2


             விடுகதைகள்

விடைகள் கீழே



1.  உயர்ந்த   மலை  நடுவே  உடன்பிறப்பு   இருவர்

ஒருவரை  ஒருவர்   பார்ப்பதில்லை.
பேசுவதும்   இல்லை.   அவர்கள்   யார்?


2.   உச்சியிலே   கிரீடம்
உடம்பெல்லாம்  கண்அது  என்ன?

3.  பளபள  பட்டுடுத்தி
பதினாயிரம்  குஞ்சரம்  தொங்கவிட்டு
தெருவில்  அசைந்தாடி   வருவாள்
திரும்பி  பார்க்க  மாட்டாள்.  அது  யார்?

4.  பகலில்   தங்கத்  தட்டு
இரவில்  வெள்ளித்  தட்டு
அவை  எவை?


5.  கோணக்  கோணப்   புளியங்காய்
எங்க  நாட்டுக்கும்   வருது
உங்க   நாட்டுக்கும்  போகுது.
அது  என்ன?

6.  கேடயமுள்ள  வீரனுக்கு   வாள்   இல்லை. அதுயார்?

7.  செக்கச்  சிவந்திருப்பாள்  செட்டியார்  மகள்
நாளைச்  சந்தைக்கு  வருவாள்   நாத்தியார்   மகள்.
அவள்  யார்?

8.  கனலை  ஏந்தியதும்  கண்ணீர்   வடிப்பாள்
கண்ணீர்  வடித்தும்  கரைந்துமே  போவாள்.
அவள்  யார்?

9.  உடம்பெல்லாம்   சிவப்பு
அதன்   குடுமி   பச்சை.
அது    என்ன?

10.  ஊசி   போல   வால்   இருக்கும்
உப்பினாற்   போல   வயிறிருக்கும்
பாசி  போல  இறக்கை   இருக்கும்
பந்து  போல்  ஆட்டம்  ஆடும்.   அது  என்ன?


11.  ஊசி   நுழையாத   கிணற்றில்
ஒரு   படி   தண்ணீர்
அது   என்ன?

12.  எங்கள்   வீட்டுத்  தோட்டத்தில்
மஞ்சள்  யானை  நிற்கும்.
அது   என்ன?

13.  என்னைப்   பார்த்தால்
உன்னைக்  காட்டுவேன். அது  என்ன?

14.  கால்  இல்லாத   மான்
வேர்  இல்லாத  புல்லைத்  தின்னும்.
அவை  எவை?

15.  குருதியில்  குளிப்பவன்
நம்  சுருதியைக்  காப்பவன்
அவன்  யார்?

16.  சிறு  சிறு  கதவுகள்
செய்யாத  கதவுகள்
திறக்க  மூட
சப்தம்  செய்யாத  கதவுகள்.
அவை  யாவை?






  1. கண்,  மூக்கு
  2. அன்னாசிப்பழம்
  3. தேர்
  4. சூரியன்,  சந்திரன்
  5. சாலை
  6. ஆமை
  7. மிளகாய்
  8. மெழுகுவர்த்தி
  9. தக்காளி
  10. தும்பி
  11. இளநீர்
  12. வைக்கோல்போர்
  13. கணணாடி
  14. மீன் ,  பாசி
  15. இதயம்
  16. கண்இமைகள்


No comments:

Post a Comment

KOLAM / RANGOLI

KOLAM – IT IS A FORM OF ARTISTIC EXPRESSION.  KOLAM IS A VERY UNIQUE WAY OF EXPRESSING ONE’S ART AND ALSO GIVES ENLIGHTENMENT TO THE FEST...