மழை
மழையே மழையே வா....வா....
மண்ணில் இறங்கி வா.. வா...
வெள்ளம் பெருக்க வா...வா...
வறட்சி போக்க வா... வா..
பருவ மழையே வா... வா..
பயிர்கள் செழிக்க வா... வா...
பள்ளங்களில் பாய்ந்து
பாசனம் செழிக்க வா...வா...
பஞ்சம் தீர்க்க வா...வா...
பாரினைக் காக்க வா... வா...
No comments:
Post a Comment